crossorigin="anonymous">
உள்நாடுபொது

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால், வெளிநாட்டுகளில் வதிகின்ற இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கத்திற்கு மிகவும் தேவையாக இருக்கின்ற வெளிநாட்டுச் செலாவணியினை அன்பளிப்புச் செய்வதன் மூலம், இக்கட்டான இத்தத் தருணத்தில் தாய்நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தி வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர்பூட்டல்களை மிகவும் வரவேற்கின்றது.

நாட்டு நாணய நிதியங்களின் சேகரிப்பு மற்றும் உபயோகம் பற்றிய வெளிப்படைத்தன்மையினை பேணும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியிலிருந்து 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 6 =

Back to top button
error: