crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தமிழ், சிங்கள புதுவருட தின கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு

தமிழ், சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் சகல மக்களிற்கும் இப் புதுவருடம் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், சௌபாக்கியத்தையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிஷேசத்தினையும் வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அரசாங்க அதிபரின் ஆசியுடன் கைவிஷேசத்தினை பெற்றுகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 + = 92

Back to top button
error: