crossorigin="anonymous">
உள்நாடுபொது

ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கேகாலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), ரம்புக்கனை பொலிஸ் அத்தியட்சகர் (SP), ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) ஆகியோருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரம்புக்கனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் ஆட்சியாளர்களிடம் சுயாதீன விசாரணை மேற்கொள்வதற்காகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கும் பொருட்டும் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

கேகாலை – ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் குற்றவியல் விசாரணை (CID) பிரிவிடம் ஒப்படைக்க, பொலிஸ் மாஅதிபிரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − = 14

Back to top button
error: