crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும்

வட மாகாண தொழிற்துறை திணைக்களமும் சிறிதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் விதாதா வள நிலையமும் இணைந்து நடத்திய புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (25) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண கணக்காளர் திருமதி. கிரிஜா பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டார்.

 

சிறப்பு விருந்தினர்களாக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மணியம் வசந்தனும் மற்றும் தொழில்துறை திணைக்களத்தின் மாவட்ட அலுவலர் நேசநாதன் பிரதீபன் அவர்களும், விதாதா வள நிலைய மாவட்ட அலுவலர் திருமதி. கோமதி மாயகிருஸ்ணன் அவர்களும் கலந்துகொண்டதோடு, பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 88 + = 94

Back to top button
error: