crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவசரகால நிலை பிரகடன வர்த்தமானி மீளப்பெற வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இலங்கையில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை மீளப்பெற்று மக்களின் அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை கோரியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேலைநிறுத்தம் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவசர கால சட்டம் தீர்வாகாது என சுட்டிக்காட்டியுள்ளது.

போராட்டங்களை ஒடுக்குவதற்கும் போராட்டக்காரர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 45 = 53

Back to top button
error: