அண்மையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (25) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இன்று (25) முற்பகல் கொழும்பு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்துகொண்டார்.