
அட்டுளுகம பிரதேசத்தில் நேற்று (27) முற்பகல் காணாமல் போன பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அட்டுளுகம கல்வீட்டுமண்டி அக்ரம் அவர்களின் 9 வயதான மகள் பாத்திமா ஆய்ஷா நேற்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கடைக்கு சென்று பொருள் கொள்வனவு செய்து விட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போன சிறுமியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
காணாமல் போன சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நில பிரதேசத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சடலமாக மீட்கப்பட்ட 9 வயதான ஆய்ஷா அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்
நேற்று கடைவீதிக்குச் சென்று திரும்பிய சிறுமி CCTV கெமரா செயற்படாத பிரதேசத்தில் எதிர்பாராத நிகழ்வு ஒன்றுக்கு முகம்கொடுக்க நேரிட்டு இருக்கலாம் என விசாரணை நடத்தி வரும் பொலீசார் நம்புகின்றனர்.
பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் நேற்று இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.