crossorigin="anonymous">
உள்நாடுபொது

உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க 75,000 வீட்டுத்தோட்டம் ஆரம்பம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

எதிர்வரும் மாதங்களில் ஏற்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க கண்டி மாவட்டத்தில் 75 000 வீட்டுத்தோட்டங்ளை ஆரம்பித்து அபிவிருத்தி செய்து வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்கோன் நேற்று (04) கண்டி மாவட்டசெயலகத்தில் வைத்துத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் அளவில் இவ்வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மட்டத்தில் இவை முன் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டத்தில் 52 000 வீட்டுத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவை பெரிதும் வெற்றி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குத் தேவைப்படும் வித்துக்கள் மற்றும் தேவையான அடிப்டை மூலப்பொருற்களும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறுபோகத்தின் போது கண்டி மாவட்டத்தில் 11000 ஹெக்டேயர்பரப்பில் பல்வேறு வகை உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் அதில் 5000 ஹெக்டேயரில் நெல் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பசுமையாக்கள் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் போதியளவு கொம்போஸ்ட் பசளையை உற்பத்திசெய்யத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: