பிராந்தியம்
மன்னார் மாவட்ட ஓய்வூதிய பெறுவோர்கள் சங்க பொது கூட்டம்
மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர்கள் சங்க பொது கூட்டம் இன்று (09) சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் அவர்கள் கலந்து கொணடார்.
கூட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் புதிய நிர்வாகத்துக்கான தலைவர், உப தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் 2 நிர்வாக உறுப்பினர்கள் கொண்ட 7 நபர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பிரதம கணக்காளர், சங்க உறுப்பினர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.