crossorigin="anonymous">
பொது

ஜூன் 13 குடிவரவு, குடியகல்வு திணைக்கள சேவைகள் வழமைபோல்

சேவைகளை பெற முற்பதிவு அவசியம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவை இன்று திங்கட்கிழமை ஜூன் 13 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வழமைபோல் சேவைகள் இடம்பெறுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

ஜூன் 10 ஆம் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 13/ 2022 இன் பிரகாரம் ஜூன் 13 ஆம் திகதி அரசு அலுவலர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும்,

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜூன் 13ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள சேவைகளைப் பெற முற்பதிவு செய்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: