crossorigin="anonymous">
பொது

அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம்

இலங்கை அரச ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமை தினம் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (12) தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடிகளையடுத்து அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது இதற்கு அமைய புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − = 7

Back to top button
error: