crossorigin="anonymous">
பிராந்தியம்

தேசிய கிரிக்கெட் அணிக்கு​ தெரிவான சதாசிவம் கலையரசி கெளரவிப்பு

தேசிய கிரிக்கெட் அணிக்கு​ தெரிவு செய்யப்பட்ட சதாசிவம் கலையரசி அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டார்.

19 வயதுக்குற்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு​ தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (16) பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியிலிருந்து​ ஆரம்பித்த நிகழ்வில் பாடசாலை முதல்வர் மாணவிக்கு மாலை அணிவித்து கெளரவித்ததை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றதை தொடர்ந்து மாணவிக்கான கெளரவிப்பு சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்விற்கு கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலர், மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பயிற்றுவிப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: