இந்தியா, இலங்கைக்கு உதவுவது குறித்து ஆராய்கிறது
இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ள நிலை தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டதாக எஸ்.ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டான நிலையில் அண்டைய நாடான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Chaired a Parliamentary Consultative Committee meeting on the situation in Sri Lanka.
A good discussion held in a positive atmosphere on various issues and India’s role.
Unanimous support on the need to stand with our neighbor in this difficult time. pic.twitter.com/MG46ijpXw9
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022