crossorigin="anonymous">
பொது

சீனா – இலங்கை இடையிலான விமான சேவை நீடிப்பு

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.

இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் (Qi Zhenhong) கடந்த 16ஆம் திகதி கோட்டையிலுள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் தூதுவர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தார்.

சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சீன ஜனாதிபதி (Xi Jinping) ஜி ஜின்பிங் அவர்கள் அனுப்பிய விசேட செய்தியை, தூதுவர் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

இந்நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நட்பு நாடாக சீனா வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 26 =

Back to top button
error: