crossorigin="anonymous">
பொது

‘ஜனாதிபதி பதவி இராஜினாமா’ பாராளுமன்றத்தில் அறிவிப்பு

பாராளுமன்றம் 19ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இன்று (16) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய இன்றைய தினக் கூட்டத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்கு முந்தாததும் ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான தினத்தை வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கான திகதியாக 2022 யூலை மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடி வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதி கருதி இதனுடன் தொடர்புடைய சட்டத்தின் 06வது உறுப்புரையில் உள்ள விடயங்களுக்கு அமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான விபரங்களையும் செயலாளர் நாயகம் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படும் என்றும் சபையில் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − 29 =

Back to top button
error: