பொது
மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (17) புதன்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மின்வெட்டு பி.ப. 1.00 முதல் இரவு 10.00 மணி வரை இரண்டு கட்டங்களில் மூன்று மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் மூன்று மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.