பொது
கோட்டாபய ராஜபக்ச இலங்கை வருகிறார்

தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸச இம்மாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (17) முற்பகல் வருகை தந்த வேளையில் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.