crossorigin="anonymous">
பொது

சபாநாயகர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரை

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு (09) சான்றுரைப் படுத்தினார்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமாக இது 09.09.2022 முதல் நடைமுறைக்கு வரும்.

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 + = 32

Back to top button
error: