crossorigin="anonymous">
உள்நாடுபொது

காலிமுகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை

சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக நாளை 20 ஆம் திகதியின் பின்னர் காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − = 85

Back to top button
error: