crossorigin="anonymous">
பிராந்தியம்

நோன்பு பெருநாளை முன்னிட்டு பௌத்தர்களுக்கு இனிப்பு பண்டங்கள் அன்பளிப்பு

கெலிஓயா – மீவலதெனிய முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதேச பௌத்த சகோதரர்களுக்கு பெருநாள் இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

மீவலதெனிய மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து கம்புராதெனிய டிகிரி போகஹ விகாரைக்கு இன்று (22) சென்ற முஸ்லிம்கள் விகாரையின் மதிப்பிற்குரிய பிரதம தேரர் மீவதுர வஜிர ஞான தேரரிடம் மீவலதெனிய பிரதேச பௌத்த சகோதரர்களுக்கான பெருநாள் இனிப்புக்களையும் பெருநாள் உணவுகளை வழங்கி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
(தகவல்: எம்.எம்.எம். ரம்ஸீன்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 60

Back to top button
error: