crossorigin="anonymous">
உள்நாடுபொது

6ஆம் வகுப்பில் மாணவர் உள்ளீர்ப்பு மேன்முறையீட்டு விண்ணப்பம் ஒன்லைனில்

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கோரப்பட்டுள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மே மாதம் 08ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் மூலமான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: