crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘மலையகம் – 200’ விழா எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில்

அரச அங்கீகாரத்துடன் மலையகம் – 200 விழாவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்களது கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலும் விழாவொன்று நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும், நிகழ்வின் இறுதி அம்சங்கள் கொழும்பிலும் நடத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 + = 42

Back to top button
error: