crossorigin="anonymous">
உள்நாடுபொது

தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரின் நியமனம் குறித்து அறிவித்தல் நேற்று (22) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் ரமீஸ் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாவணரான இவர், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், துறைத் தலைவர் மற்றும் பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − = 14

Back to top button
error: