crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுகாதார தொழிற்சங்கம் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல சிவில் அமைப்புக்கள் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு உட்பட தமது துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இன்று (22) வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மதிய உணவு நேரத்தில் இந்த போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை மருத்துவ மற்றும் சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் டொக்டர் மதுர சேனவிரத்ன, இத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − 13 =

Back to top button
error: