crossorigin="anonymous">
உள்நாடுபொது

வர்த்தக வாகனங்கள் இறக்குமதி அனுமதி மீண்டும் இரத்து

வர்த்தக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வௌியிடப்பட்ட வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததையடுத்து வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உப குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே மீண்டும் வர்த்தக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − 70 =

Back to top button
error: