crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

இந்தியா தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் – இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) உத்தியோகபூர்வமாக  ஆரம்பமானது.

இன்று காலை 8 மணியளவில் இந்தியா – தமிழக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் இந்திய மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த கப்பல் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை மதியம் 12.20 மணியளவில் வந்தடைந்தது.

மீண்டும் மதியம் 1.15 மணியளவில்காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து சேவையை தொடக்கி வைத்ததுடன் மீண்டும் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி 31 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டது.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இரு வழிக்கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை பொருட்களை எடுத்துச்செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் இலங்கை கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் உற்பட ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற் உறுப்பினர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: