crossorigin="anonymous">
உள்நாடுபொது

72 சுகாதார தொழிற்சங்கங்கள் காலை 6.30 மணி முதல் பணிப் புறக்கணிப்பு

35 ஆயிரம் ரூபா வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்க வேண்டும்

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் ரூபா வருகை மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு தங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 10 = 13

Back to top button
error: