
தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு அறிவித்துள்ளது.
பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னர் வாக்காளர் பதிவுப் பணி நிறைவு செய்யப்பட வேண்டுமென, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் தங்கியிருப்போரின் விபரங்கள், அவர்களது வீடுகளில் பெறப்படும் வாக்காளர் பட்டியலில் அவசியம் சேர்க்கப்பட வேண்டும். நிரந்தர வதிவிடத்தை மாற்றாதோர், திருமணம், கல்வி அல்லது வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியோர் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.