crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சி ஆபாச வீடியோ தம்பதியினருக்கு சிறை தண்டனை

பலாங்கொடை, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று (01) பலாங்கொடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியினருக்கு இவ்வுத்தரவை வழங்கிய நீதவான், ரூ. 10,800 அபராதத்தையும் விதித்தார்.

சம்பவம் தொடர்பில், எல்பிட்டியைச் சேர்ந்த 24 வயது பெண்ணும், மஹரகமவைச் சேர்ந்த 34 வயது நபரும் கடந்த செப்டம்பர் 02 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டதோடு, குறித்த வேளையில், கொவிட்-19 தொற்று இருந்தமை காரணமாக, அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 4 =

Back to top button
error: