crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பு

ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இன்றையதினம் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சம்பளப் பிரச்சினை தொடர்பில், ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நேற்றையதினம் (12) பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் இன்றையதினம் (13) ஏனைய சங்கங்கங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காது தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 26

Back to top button
error: