crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடை நகர சபை இறைச்சிக்கடைக்கு எவரும் விலை மனு கோரவில்லை

(நதீர் சரீப்தீன்)

பலாங்கொடை நகர சபையின் பொது வியாபார கடைத்தொகுதியில் உள்ள இறைச்சிக்கடையை 2022 ஆண்டிற்கான குத்தகைக்கு விடுவதற்காக விடுக்கப்பட்ட விலை மனுக்கோரலில் இறைச்சிக் கடையைப் பெறுவதற்கு ஒருவரும் விண்ணப்பிக்கவில்லை என நகர பிதா சாமிக நில்மினி வெவேகெதர
(25) தெரிவித்தார்.

பொதுவாக விலைமனுக் கோரப்பட்டு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நகர சபையில் திறக்கப்பட்டு.அதிகூடிய குத்தகைக்கு இறைச்சிக் கடை வழங்கப்படுவது வழமை ஆனால் இம்முறை ஒருவரும் விண்ணப்பிக்காமையானது விசேட அம்சமாகும்.

குத்தகைக் கட்டணத்தை குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட ஒரு குழுவினர் திட்டமிட்டு விலைமனுக் கோரல் செய்யாது தவிர்த்திருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும்.விலை குறைப்பிற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நகர பிதா சாமிக நில்மினி வெவேகெதர
மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: