crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 18 பேர் மரணம்

2022 புத்தாண்டு நேற்றைய தினம் (01) இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 18 பேர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதில் 10 பேர் நேற்றைய தினமும் (01), ஏனைய 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றைய தினம் (02) மரணித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புது வருட தினமான நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில், நீர் நிலைகள் மற்றும் கடலில் நீராடச் சென்ற நிலையில் பல மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 30 = 34

Back to top button
error: