crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட இரு நாட்களைக் கொண்ட நடமாடும் சேவையின் ஓர் அங்கமாக இழப்பீட்டுக்கான அலுவலகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நேற்று (29) கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதனூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த கால யுத்த அசாதாரண சூழ்நிலையினால் பாதிப்புக்குள்ளான 34 அரச உத்தியோகத்தர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு, 514 பேருக்கான பொது மக்கள் சொத்தழிவு நட்டஈட்டுக் கொடுப்பனவு, 5 இறப்புக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட 553 குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இதற்காக 39,416,460.00 ரூபா ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றைய தினத்தில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலர்களுடாக வழங்கிவைக்கப்படும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், நிதி அமைச்சின் மேலதிக செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், குறித்த பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 33 − = 31

Back to top button
error: