crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகையிரதமும் முச்சக்கர வண்டியும் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்

காலி – ரத்கம ரில்லம்ப புகையிரத கடவையில் இன்று (01) மாத்தறை – வவுனியா புகையிரதமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளதுடன் விபத்தின்போது முச்சக்கர வண்டியில் அதன் சாரதி, சாரதியின் தந்தை மற்றும் மனைவி, மனைவியின் தாய் ஆகியோர் பயணித்துள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து, குறித்த 4 பேரும் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதியின் மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

காலி கராப்பிட்டி வைத்தியசாலையின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 5

Back to top button
error: