crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, இன்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க அவர்கள், கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − 64 =

Back to top button
error: