crossorigin="anonymous">
உள்நாடுபொது

கட்டுநாயக்க பிரதேசத்தில் 14 மணி நேர நீர் வெட்டு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (09) கட்டுநாயக்க சுதந்திர வலயம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 4.00 மணி முதல், 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவித்துள்ளது.

இன்று பி.ப. 4.00 மணி முதல் நாளை (10) மு.ப. 6.00 மணி வரையான காலப் பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படுமென சபை அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் ஏகல, கொட்டுகொட, உதம்மிட்ட, ரஜ மாவத்தை, நீர்கொழும்பு வீதி, வஹட்டியாகம, தேலதுர, கட்டுநாயக்க, சீதுவை, உடுகம்பொல, மினுவாங்கொடை, கட்டுநாயக்க விமானப்படை தளம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், கட்டான தெற்கு ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − = 51

Back to top button
error: