crossorigin="anonymous">
உள்நாடுபொது

பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்.

பெற்றோலிய கூட்டுத்தாபன (CEYPETCO) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இன்று முதல் அவர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்பதோடு, ஒரு சில அசம்பாவிதங்கள் மற்றும் மயக்கம் காரணமான உயிரிழப்புகளும் அண்மைக்காலமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயங்களை கருத்திற் கொண்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 13 =

Back to top button
error: