crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி தாழ்நிலங்கள் நீரில் மூழ்கின

(நதீர் ஷரீஃதீன்)

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்தும் பெய்துவரும் அடை மழை காரணமாக களுகங்கை நீர் மட்டம் உயர்ந்து இரத்தினபுரி மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகள் யாவும் நீரில் மூழ்கிப் (14) போயுள்ளன.

இரத்தினபுரி நகரத்தின் பல பாகங்களிலும் பலநாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி. எலபாத்த.பெல்மதுளை. குருவிட்ட ஆகிய பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது

தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் படி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − 36 =

Back to top button
error: