crossorigin="anonymous">
உள்நாடுபொது

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் பஸ்களில் பயண பொதிகளுக்கு தடை

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாமென இந்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்த்து பஸ் பயணிகளின் பாதுகாப்புக்காக, பஸ்களில் தேவையற்ற பயணப் பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

சந்தேகத்துக்கிடமான பொதிகள் மற்றும் பஸ்களில் செல்பவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், பயணிகள் தங்களுடைய பாதுகாப்பையும் ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயணிகள், தமது பைகளை பொதிகள் வைக்கும் இடங்களில் வைக்காமல், அவற்றை தம்வசம் வைத்திருக்குமாறு கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பஸ் ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: