crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின் துண்டிப்பு நேரம் மறுசீரமைப்பு

இலங்கை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இன்று (22) முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மின் துண்டிப்பு செய்யப்படும் நேரம் மறுசீரமைக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை (23) இலங்கை முழுவதும் 3,844 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்

.பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தற்போதைக்கு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்து தங்களின் அனுமதிஅட்டையினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: