crossorigin="anonymous">
உள்நாடுபொது

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 15 சிறைக்கைதிகள்

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் 15 சிறைக்கைதிகள் தொற்றுவதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியும், புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்புக் கைதிகள் நால்வரும், வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் 10 சிறுவர் குற்றவாளிகள் என 15 கைதிகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலையின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 − 36 =

Back to top button
error: