
இலங்கை முழுவதும் அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம், பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை குறித்த திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சு இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மீண்டும் எரிபொருளின் விலைகள் இன்று (24) அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது