இன்று மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பஸ் போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்த நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ளது.
பஸ் கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதுடன் அதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணமும் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தலா 80 ரூபாவுமாக கட்டணத் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.