crossorigin="anonymous">
உள்நாடுபொது

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் கடமைக்கு அழைப்பு

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பதற்கு தேவையான நடைமுறையொன்றினை முன்னெடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டுலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு சுற்றறிக்கையொன்றினை நேற்று (25) வெளியிட்டுள்ளது

இலங்கை பொது நிர்வாக, உள்நாட்டுலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன அவர்கள் இன்று (26) முதல் மறு அறிவித்தல் வரை அரச நிறுவனங்களில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைப்பது தொடர்பான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

பொது நிர்வாக, உள்நாட்டுலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர்  சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளார்

எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் உருவாகியுள்ள பிரச்சினை காரணமாகவும், போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாமை காரணமாகவும் அரச உத்தியயோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கலை கவனத்துக்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: