இலங்கை அரசாங்க ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்ள முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட விடயங்களை கவனத்திற் கொண்டே இத்தகைய தீர்மானத்தை முன் வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் பின்னர் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.