இலங்கை முழுவதும் இன்று (08) முதல் வழமைபோல் எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
5,000 மெட்ரிக் தொன் பெற்றோலும், 3,500 மெட்ரிக் டன் டீசலும் இலங்கை முழுவதும் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்
எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதுடன் மத்திய வங்கி அதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொண்டுள்ளது.