crossorigin="anonymous">
பிராந்தியம்

காத்தான்குடியில் இயற்கை மரக்கறி, பழவகை விற்பனை நிலையம்

காத்தான்குடியில் சேதனப் பசளையினால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி பழவகைகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் இன்று (11) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை, வேல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து சேதனப் பசளையினால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி மற்றும் பழவகைகளை விற்பனை செய்யும் இந்த விற்பணை நிலையத்தை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அஹமட் பரீட் மாவத்தை பஸ்மலா சதுக்கதில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எம். எச். எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி சிறீகாந் கலந்து கொண்டு சேதனப் பசளையினால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி, பழவகைகளை விற்பனை செய்யும் நிலையத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இதன்போது வேல்ட் விஷன் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.ஜெபராஜ், வேல்ட் விஷன் நிறுவனத்தின் Nature Growers திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.லோகிதராஜா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.நஸூருதீன், காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − = 90

Back to top button
error: