தரம் ஒன்றுக்கு மாணவர் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை
இலங்கை கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்த வருடத்திலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது இந்த சுற்று நிருபத்திற்கு அமைய இடம்பெறும். பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்காகவே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
“பாடசாலைககளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் – 2023
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்;ட பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் போலவே, அதுதொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையொன்று கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 2023 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக குறித்த திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவுகளை ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.”