crossorigin="anonymous">
பொது

துப்பாக்கி போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக முறைப்பாடு – பொலிஸ்

இலங்கை பாராளுமன்றம் அருகே நேற்று (13) பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதுடன் இதன்போது இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று (14) தெரிவித்துள்ளது

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இதேவேளை இலங்கையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 09 ஆம் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து இலங்கை ஜனாதிபதி மாளிகை, இலங்கை ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பிரதமர் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமளிகை ஆகியவற்றை கைப்பற்றி அங்கு தங்கியிருந்து உடனடியாக பதவி விலகுமாறு கோரி தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: