crossorigin="anonymous">
உள்நாடுபொது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தாமதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல வாக்களிப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பின் போது அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் நான்கு அம்ச யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 52 = 59

Back to top button
error: